தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் மழை முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.பா., வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழைக்காலத்தில் நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் முகத்துவாரப் பகுதியில் நடைபெறும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என மேயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.