தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக தலைமை அலுவலகத்தில், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வருகை தந்தார்.
அவருக்கு, சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சால்வை அணிவித்து கௌரவம் செய்தார்.
இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.