Breaking News

மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

  • Share on

மயிலாடுதுறையில் தோழர் வைரமுத்து மீது நடைபெற்ற ஜாதி ஆணவ படுகொலைக்கான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, தமிழக அரசை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17, 2025 இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரம் நகர், ஆட்டோ காலனி அருகில் நடைபெறுகிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  • Share on

பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!

தூத்துக்குடியில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த தினம்!!

  • Share on

Trending News