தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் காலை 9 மணியளவில் நடக்கும் என்று அழைத்ததின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் காலை 9 மணியளவில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்தனர்.
ஆனால் 10.30 மணிவரை ஆகியும் காவல் துறை அதிகாரிகள் வரவில்லை, இதனால் நீண்ட நேரம் ஆகியும் காவல் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P. ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.