தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியிலுள்ள கேடிகே பள்ளியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை பார்வையிட்டு தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் பகுதி கழக செயலாளர் மேகநாதன் மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக பொருளாளர் முத்துராஜா, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், ராஜதுரை, முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
