Breaking News

ஆணவப் படுகொலையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிச் சட்டம் இயற்றக் கோரி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

  • Share on


புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார் பி.ஏ., 8 ம் தேதி இன்று தமிழகம் முழுவதும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் வைத்து இன்று மாலை தமிழக அரசே ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டமன்றத்தை கூட்டி உடனே தனி சிறப்பு சட்டத்தை இயற்றக் கோரி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் தனிச் சட்டம் அமல்படுத்தாத தமிழக அரசுக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம், மாநில வழக்கறிஞரணி செயலாளர் கே.எம். ஸ்ரீதர் கூறுகையில், ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டமன்றத்தை கூட்டி உடனே தனி சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

ஆணவ படுகொலையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இதுபோன்று தனிச்சட்டம் இயற்றினால் மட்டுமே ஆணவ படுகொலை நடைபெறுவதை தடுக்க முடியும் என்றார்.

ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் எட்வின் ஜோசப், மாவட்ட துணை செயலாளர் இந்திரன், மாவட்ட துணை செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் மகேந்திரன், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் தீப சித்ரா, மாவட்ட மகளிர் அணி வேலம்மாள், இசக்கியம்மாள், அழகு மாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சுடலைமாடன், சந்தியாகு, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் மைக்கேல் ராஜ், 53 வது வார்டு வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லெட்சுமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பிராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, மகளிரணி ராணி, மற்றும் பிச்சையா உட்பட திரளானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.





  • Share on

முட்புதரில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மாணிக்கவாசகர் நகர் பகுதி மக்களுக்கு பாராட்டு!!

தூத்துக்குடி சண்முகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது!!

  • Share on

Trending News