தமிழகத்தின் திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர். கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு,
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி செயலாளருமான ரெங்கசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் புதூர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வெயில் ராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.