Breaking News

தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை - அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் புடைச்சூழ ஊர்வலமாக சென்று பொதுமக்கள், வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி அழைப்பிதழ் வழங்கினர்!!

  • Share on

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தாரக மந்திரத்தோடு தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி தூத்துக்குடி மாநகரில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளார்.



இதனையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலையில் பழைய அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று தேரடி வரை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பிதழ் மற்றும் இனிப்புகள் வழங்கி குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அழைப்பிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம், முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மில்லை ராஜா, பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, வடக்கு மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ் குமார், ஆத்தூர் நகரச் செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ரத்தினம், முன்னாள் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், வட்டச் செயலாளர்கள் அருண்குமார், அந்தோணி, சுயம்பு, சகாயராஜ், ஜெனோபர்  முன்னாள்  வட்டச் செயலாளர்கள் திருமணி, அம்பை முருகன், அன்புலிங்கம், சக்திவேல், நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, ஜெடி அம்மா  கே.ஏ.பி. ராதா, சேசுராஜ், சண்முகவேல், தாசன், ஜெயபாண்டியன், கோட்டாளமுத்து, முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ், சிறுபாண்மை அணி அசன், அபுதாஹீர், போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டெரன்ஸ், சண்முகராஜ், சங்கர், பேச்சியப்பன், முருகன், ஒன்றிய மகளிர் அணி  இணைச் செயலாளர் சேர்மக்கனி, முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குனர் பாலசுப்பிரமணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள் தாய், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ் பாலன் உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, சிறுபான்மை பிரிவு அசன் பிரபாகர், மற்றும் சுண்ணாம்பு சந்தனம், ஸ்டாலின், அந்தோணி ராஜ், தனுஷ், பாபநாசம், அந்தோணி செல்வராஜ் ஆறுமுகம், ஆறுமுகம், சித்திரைவேல், துறைமுகம் ராஜ்குமார், மகாராஜன், தாசன், ஜான்சன், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, வெங்கடாசலம்,, மகளிர் அணி, புஷ்பா, ஜீவா, மருதம்மாள், சரோஜா, உமா, அரசு வழக்கறிஞர்கள், ராஜாராம், கோமதி மணிகண்டன், முன்னாள் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் துரைப்பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணா - பதற்றம் பரபரப்பு!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம், பெருமாள் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

  • Share on

Trending News