தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3 சென்ட் பகுதியிலுள்ள அந்தோணியார்புரம் மக்கள் சட்ட மேதை அண்ணல் டாக்டர். அம்பேத்கார் திருவுருவச் சிலைக்கு முன்பாக மின்விளக்கு வசதி வேண்டி கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை தொடர்ந்து சூரிய ஒளி விளக்கு அமைத்துக் கொடுத்து மக்களின் பயன்பாட்டிற்க்காக அர்ப்பணித்து முன்னதாக அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை செலுத்தினார். 
உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் வட்ட கழக செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி, உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.