தூத்துக்குடியில் காமராஜா் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காமராஜா் திருவுருவப் படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஆகியோர் மாலை அணிவித்து மாியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்கள்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ், மாப்பிள்ளையூரணி மத்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வர்ட்ராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ், வெள்ளப்பட்டி காங்கிரஸ் தலைவர் ஆனந்தம், சிவாஜி பேரவை அருள்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.