தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலதட்டப்பாறை கிராமத்தில் மேல தட்டப்பாறை, தளவாய்புரம், உமரிகோட்டை, கீழ தட்டப்பாறை, வடக்கு மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய ஊராட்சி கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மேல தட்டப்பாறை கிராமத்தில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், அரசால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முரளிதரன் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை ஒன்றிய கழக செயலாளர்கள் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன் K.K.R. ஜெயக்கொடி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் S. வீரபாகு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பலவேசம் ஒன்றிய துணைச் செயலாளர்கள் நாராயணன் ஹரிபாலகிருஷ்ணன் ஒன்றிய பொருளாளர் சின்னராசா ஒன்றிய தொண்டர் அணி சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சின்னத்துரை பாண்டியன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் R.J. வசந்த் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் மாரியப்பன் ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சங்கராஜ் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சுபாஷ் கிளைக் கழக செயலாளர் S.M. மாரியப்பன், ரங்கநாதன், கதிரேசன், கந்தசாமி , சண்முகராஜ், தளவாய்புரம் கருப்பசாமி மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
