திமுக கட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுப்பினர் பதவிக்கு அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர். ஜவஹர் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.