ஜெகன் மூர்த்தியாைரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து இன்று இரவு 7.20 மணியளவில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகில் பல்க் ஜங்ஷன் எதிரே தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் டாக்டர்.பூவை எம். ஜெகன் மூர்த்தியார் மீது பொய் வழக்கு போடக்கூடாது, தமிழக அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று முழக்கமிட்டு சாலை மறியல் போராட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது .
இதில் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப், மாவட்ட பொருளாளர் சு. ஜெரினா பானு, மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் த. மகேந்திரன், மாவட்ட A P.L.F அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணை செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளை முத்தையாபுரம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்து பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.