பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :-
இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரித் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, தியாகம் மற்றும் விசுவாசத்தின் பெருநாளாம் பக்ரீத் தினத்தில் அனைவருக்கும் எனது பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில் உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் பிரார்த்தனைகள் பதிலளிக்கப்படுவதாக உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட வாழ்த்துகிறேன்.
உங்கள் இல்லங்களில் ஒளி மற்றும் குதுகலத்தால் நிறைந்து தளும்பட்டும் இந்த நாள் சமூகத்தில் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பரவ செய்யட்டும். உங்கள் தன்னலம் அற்ற தியாகங்கள் வாயிலாக இயலாதோர் மற்றும் இல்லாதோர் பயன்பெற வேண்டுகிறேன். அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பான பக்ரீத் வாழ்த்துக்கள் என்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.