மதுரையில் ஜூன் 1 ம் தேதியான இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமானது 48 ஆண்டுகளுக்கு பின் உத்தங்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போல் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்.