இயேசு கிறிஸ்து பிறந்த 2025 ஆம் ஆண்டு ஜூபலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் தூத்துக்குடி புனித பனிமய அன்னை பேராலயத்தில் ஜெபமாலை பேரணி நடைபெற்றது.
பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி பேராலய வளாகத்தில் தொடங்கி தங்கத்தேர் பவனி வரும் வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் புனித பனிமய அன்னை பேராயலத்தை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உடன் நிறைவு பெற்றது. பேரணியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
