ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு பரும்பூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், உதவி பொறியாளர் பத்மாவதி, ஊராட்சி செயலர் ராமலிங்கம், ஊர் தலைவர் ராசாமணி, மகளிரணி உத்திரக்கனி, தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி, உலகையா, தங்கத்துரை, செல்வராஜ், ஒப்பந்தகாரர் ராஜேந்தின், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
